கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர்கள் உதவியாக வந்தன. முக்கியமாக, மகேந்திரா குழுமத்தின் ஆனந்த் மகேந்திரா பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக கடந்தாண்டே, ரூ .2.5 லட்ச மதிப்பில் 1.75 சென்ட் நிலம் வாங்கி கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி 1.75 சென்ட் இடத்தை கமலாத்தாள் பாட்டிக்கு பதிவு செய்து கொடுத்தார். மொத்தம் 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.