இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவிய சீன ராணுவம், இந்தியப் பகுதிகளில் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் கட்டுமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி கொடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் தற்போதுள்ள நிலையைத் தொடர வேண்டும் என்று இந்தியா சார்பில் சீனாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சீனா மறுத்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், லடாக் எல்லைப் பகுதியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கூர்ந்து கவனித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் எல்லையிலுள்ள சூழல் குறித்து அதிகாரிகள் விளக்கியிருந்தனர். இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.