அவரைத் தொடர்ந்து பேசிய மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள், “பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை எந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது.
பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது. இந்து தர்மத்துக்கு எதிரான துரோகிகளை… தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சாலையில் நடமாட முடியாது. ஆளுங்கட்சியினர் சாதி, மத, பேதம் இல்லை எனக் கூறுகிறார்கள். கிறிஸ்துவ பாதிரியார், `கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரையில், எங்களால்தான் அரசு உள்ளது. அரசை நாங்கள்தான் நடத்துகிறோம்’ எனக் கூறி வந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.