இந்த கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படுவதாக இருந்தால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு உரிமை உள்ளதாக இருந்தபோதும்கூட, இந்திய மீனவர்களால் இந்த வடபகுதி மற்றும் மன்னார் மாவட்ட கடல் பகுதி தொழில்ரீதியான ஆக்கிரமிப்பின் ஊடாகவும், ஏனைய கடத்தல் நடவடிக்கைகளின் ஊடாகவும், கடலில் உள்ள மீன் வளங்கள் அழிந்து, போதைவஸ்து கடத்தல் சம்பவங்கள் இங்கு அதிகமாக பதிவாகி வருகின்றன.
இதனால் பாதிக்கப்படப்போவது இலங்கை வடபகுதி மீனவர்கள் மட்டுமல்ல… இந்த இலங்கை நாடும் முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
எனவே, இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி இது இலங்கைக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, இலங்கை பொருளாதார நெருக்கடிக்காக நமது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு ஒவ்வொரு தீவுகளையும் விற்கும் நடவடிக்கையில் இறங்கினால், அதைவிட நாங்கள் மடிந்து போவது மேல் என்பதை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.