குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலிய, ஜப்பான் ஆகிய நாடுகள், பிராந்திய பாதுகாப்பு குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தின. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற இந்த குவாட் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உட்பட நான்கு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பாதுகாப்பு குறித்த இந்த பேச்சுவார்த்தையின்போது, டோக்கியோ நகரில் ரஷ்ய, சீன போர் விமானங்கள் வானில் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி தகவல் தெரிவித்திருக்கிறார்.