புதுடில்லி:இன்று நடக்கும் இரண்டாவது சர்வதேச கொரோனா மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்த 2020ல், கொரோனா பரவல் துவங்கியது. பின் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் இரண்டாவது அலை பரவியது. கொரோனாவால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு செப்., 22ல், முதல் சர்வதேச கொரோனா மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்தது. அமெரிக்கா ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், இரண்டாவது கொரோனா சர்வதேச மாநாடு இன்று நடக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.மாநாட்டில், கொரோனாவால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் பற்றி, பல நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கின்றனர்.
புதுடில்லி:இன்று நடக்கும் இரண்டாவது சர்வதேச கொரோனா மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.கடந்த 2020ல், கொரோனா பரவல் துவங்கியது. பின் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் இரண்டாவது அலை பரவியது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.