புதுச்சேரி,-உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 31,509 ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. பின், மாடுகளை இனிமேல் சாலைகளில் திரிய விடமாட்டோம் என உறுதிமொழி பெறப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், ‘இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போர், அவற்றை தங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டிவைத்து சுகாதாரமான முறையில் வளர்க்க வேண்டும் என, தெரிவித்து உள்ளார்.
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.