காரைக்கால்-துணிக்கடையில் சுடிதார் டாப்ஸ் திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் புதுத்துறை டைமண்ட் நகரை சேர்ந்த முகமது அஸ்ரப் அலி, பாரதியார் சாலையில் உள்ள செல்வி ரெடிமேடு ஸ்டோர் துணிக்கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்யும்போது, 2 பெண்கள் புடவைகளை வாங்குவதுபோல் துணிகளை பார்த்துள்ளனர்.பின், கலர் பிடிக்கவில்லை என கூறிவிட்டு வெளியில் செல்லும்போது கடைவாசலில் வைத்திருந்த சுடிதார் டாப்ஸ் கட்டுகளை திருடினர். இரண்டு பெண்களையும் கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டிபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மலர், 40; உஷா, 50, என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்கால்-துணிக்கடையில் சுடிதார் டாப்ஸ் திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் புதுத்துறை டைமண்ட் நகரை சேர்ந்த முகமது அஸ்ரப் அலி, பாரதியார் சாலையில் உள்ள செல்வி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.