இந்தியாவுக்கு வெளியே உள்ள பிராந்திய பகுதிகளிலிருந்து, இந்திய சுங்க சாவடிகளை வந்தடையும் கப்பல்களின் சேவைகளுக்கு குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், வரி விதிக்க முடியாத பிராந்தியத்திலிருந்து வரும் கப்பல்கள் இந்திய நாட்டின் சுங்கச் சாவடிகளை அடையும்போது 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை விதிக்க முடியாது, அதோடு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் அறிக்கையும் ரத்து செய்வதாக குஜராத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும், ஜி.எஸ்.டி கவுன்சிலும் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தீர்மானிக்க ஏற்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது.