ஒரு புகாரை எழுதி வாங்கிக் கொண்டு, அதன் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், ஜனநாயக விரோத ஆட்சி, சட்டத்தை மீறிய ஆட்சி நடைபெறுகிறது. அரசினுடைய தீய எண்ணங்கள் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகைத் துறையை ஒடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒடுக்கவேண்டும். முழுக்க, முழுக்க காவல்துறை ஒரு ஏவல்துறையாக மாற்றிச் செயல்படுவது என்பது கண்டனத்திற்குரிய, தமிழகம் வெட்கி தலை குனியக்கூடிய, வேதனைப்படக்கூடிய விஷயமாகத்தான் இதைக் கருத முடியும். கழக ஆட்சியில் அவதூறு வழக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் வழக்கு பதிவு செய்வது வரலாற்றிலே இதுதான் முதல் முறை.
இன்றைக்குக்கூட எதிர்க்கட்சித் தலைவர் சென்னையில் 20 நாள்களில் 18 கொலைகள் நடந்துள்ளன என்று அறிக்கை அளித்துள்ளார். இது தலை நகரா. கொலை நகரா. இப்படித்தான் சென்னை இன்றைக்கு மாறிவிட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதியில் தோல்வி. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வி. இந்த இரண்டைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்குச் சரியான பாதுகாப்பு இல்லை. பட்ட பகலில் கொலை, ரௌடிகள் ராஜ்யம். ஆளும் கட்சியின் அராஜகம். தலைநகரம் கொலை நகரமாக மாறியுள்ளதுதான் இன்றைக்குத் தமிழகத்தின் நிலை” என்று தெரிவித்தார்.