மேலும் விவசாயிகளுடனான ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் அமைத்ததற்குப் பிறகு, முதல்முறையாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மேலும் படிக்க… கொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை… சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு
3 வேளாண் சட்டங்களுக்கும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவில் பூபிந்தர்சிங் மன், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவில் இருந்து விலகுவதாக பூபிந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்ததால், தன் மீது விமர்சனங்களை எழுப்புவதால், குழுவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.