அப்போது டி.கே.ஜி, `என்னையும் இளைஞரணி அமைப்பாளரான சண்.ராமநாதனும் ஒண்ணா ஒரே நேரத்தில் உட்கார வச்சிருக்கீங்க’ என்று சந்திரசேகரனைப் பார்த்து கேட்டாராம். அதற்கு எஸ்.எஸ்.பி, `அவர் மேயர் எல்லா இடத்துலையும் இருப்பார்’ எனக் கூறியிருக்கிறார்.
உடனே டி.கே.ஜி, `தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நீங்க மாவட்டச் செயலாளருக்கு அடிபணிந்து செயல்படுவதாக சொன்னீங்க. சிங்கம் மாதிரி இருந்த நீங்க இப்ப இப்படி ஆகிட்டீங்க’ என்று சொல்ல, `நான் யார்னு தெரியுமா?” என்று எஸ்.எஸ்.பி கேட்டிருக்கிறார்.
`என்ன அண்ணே, மிரட்டுற மாதிரி பேசுறீங்க’ணு கேட்டவர், சந்திரசேகரனைப் பார்த்து, `எல்லாம் உங்களாலதான் எல்லாம் போச்சு நான் சொன்ன ஆளுக்கு மேயர் கொடுக்கல. இப்ப எனக்கு எதிராக செயல்படுறீங்க.. என் முதுகுல குத்துறீங்க’ என்று சொல்ல உடனே துரை.சந்திரசேகரன், `நீங்க தான் என் முதுகுல குத்துனது… நான் எதையும் கண்டுக்கலை… தலைமையிடம் அத பத்தி சொல்லியிருந்தா ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாங்க” என்று கூறியிருக்கிறார்.