வாராங்கல்: தெலுங்கானாவில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் காங். ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்வோம் என காங்., எம்.பி., ராகுல் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா வந்திருந்த காங்.எம்.பி., ராகுல், வாராங்கல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தை துவக்கி வைத்து பேசியது, தெலுங்கானா மக்களின் கனவை நனவாக்க சோனியாவும் தான் உங்களுக்கு புதிய மாநிலத்தை உருவாக்கி தந்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், கோடிக்கணக்கில் அரசு பணத்தை கொள்ளையடித்துள்ளார். அவர் மீது மத்தியில் ஆளும் பா.ஜ., அமலாக்கத்துறையை அனுப்பி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. .வரப்போகும் சட்டசபை தேர்தலில் காங். ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். இவ்வாறு ராகுல் பேசினார்.
வாராங்கல்: தெலுங்கானாவில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் காங். ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்வோம் என காங்., எம்.பி., ராகுல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.