அந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று ஆதீன குரு முதல்வர் குருஞானசம்பந்தரின் குரு கயிலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்திலிருந்து நாற்காலிப் பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான பூங்காவிலுள்ள ஐந்து குருமகா சந்நிதானங்களின் குருமூர்த்தங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு, தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சந்நிதானத்தை குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது மரபு அதனடிப்படையில் குருமகா சந்நிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்.