பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாக கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மின் துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து பிப்ரவரி 1-ம் தேதி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அதையடுத்து அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், மின் துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று உறுதியளித்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் வேலைநிறுதத போராட்டத்தை அப்போது நிறுத்தினர். ஆனால் தற்போது அரசு மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். நேற்று முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.