“திராவிட மாடல் என்ற பெயரில் விளம்பர ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?”
“அ.தி.மு.க-வினர் விளம்பரமே செய்யாமலா ஆட்சி செய்தார்கள். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசேர்க்க, புரிய வைக்க, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. நான் மாரத்தான் ஓடுவதை எப்போதும் எங்கிருந்தாலும் சமூக வலைதளங்களில் லைவ் செய்வேன். நான் ஒரு சர்க்கரை நோயாளி, என்னுடைய மூட்டு உடைந்து, நெற்றி உடைந்து ‘சுப்பிரமணியன் கவலைக்கிடம்’ என செய்தி வெளியானது. என்னால் இனி ஓடவே முடியாது மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், இவற்றைப் பொய்யாக்கி, லண்டன், இத்தாலி என 12 நாடுகள், இந்தியாவின் 22 மாநிலங்களில் என இதுவரை 125 மாரத்தான்கள் ஓடியிருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் ஒருமணி நேரமாவது மாரத்தான் ஓடி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன்.”
“உங்களுக்கு சரி ஆனால், முதல்வர் செய்யும்போதுதான் அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?”
“என்னைச் சந்திக்கும் பெரும்பாலானவர்களில் என் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசுவதைவிட என்னைப் பார்த்து உடற்பயிற்சி செய்தோம், ஓடினோம் என்பார்கள். அதுதான் எனக்கு உற்சாகத்தையும் கொடுக்கும். இதை விளம்பரம் என்பீர்களா? இல்லை இது விழிப்புணர்வு. முன்பெல்லாம் பணம் வைத்திருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டவர்கள், இப்போது நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். என்னை பார்த்தே பலரும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும்போது முதல்வரைப் பார்த்து எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த விழிப்புணர்வு போய்ச் சேரும். இது கூடப் புரியாமல் இவர்களெல்லாம் என்ன அரசியல் செய்கிறார்கள்?”