வில்லியனுார்,-வில்லியனுார் உழவர் உதவியகம் சார்பில், மங்கலம் கிராமத்தில் ‘மண் வளம் பாதுகாப்பு மற்றும் மண் சேகரிப்பு முகாம்’ நடந்தது.வேளாண் துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் வேளாண் அலுவலர் நடராஜன், விளை நிலங்களில்இருந்து மண் மாதிரிகளை சேகரித்தார்.அப்போது, விவசாயின் பெயர், நிலத்தின் பரப்பளவு, சர்வே எண், கிராமத்தின் பெயர், கொம்யூன் பெயர், மண் மாதிரி எடுத்த தேதி, நீர்பாசன முறை, விவசாயின் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டது.ஆய்வுக்கு பிறகு மண்வள அட்டைகளில் மண் தரம் குறித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். நிகழ்ச்சியில் வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் உமாராணி, உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் மங்கலம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வில்லியனுார்,-வில்லியனுார் உழவர் உதவியகம் சார்பில், மங்கலம் கிராமத்தில் ‘மண் வளம் பாதுகாப்பு மற்றும் மண் சேகரிப்பு முகாம்’ நடந்தது.வேளாண் துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் இணை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.