இதற்கிடையில், கொரோனா பரவல் குறித்தும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பல்வேறு வதந்திகள் மக்களிடையை பரவுகின்றன. வதந்திகளைத் தடுத்து நிறுத்துவது பெரும்பணியாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் பசுவின் மாட்டுச் சாணம் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மக்கள் நம்பி, மாட்டுச் சாணத்தை உடல் முழுவதும் பூசிக் கொள்கின்றனர். அதனை ஒரு இயக்கமாக செய்யும் அளவுக்கு அவர்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாகுர், ‘மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வது பாதுகாப்பானது. இது கற்பனையில் சொல்வது அல்ல. இது அறிவியல்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல, உத்தரப் பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்தர் சிங், ‘கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மக்கள் மாட்டின் சிறுநீரகத்தைக் குடிக்கவேண்டும்’ என்று குறி அதைக் குடித்துக் காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெயலால், ‘மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு சிறுநீர் கொரோனா பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும், மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீரைப் பயன்படுத்துவதால் விலங்குகளிடமிருந்து வேறு ஏதேனும் நோய்கள் மனிதனுக்கு பரவலாம்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.