பெங்களூரு:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி, அமைச்சர்கள், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்பாடு செய்த விருந்தில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பங்கேற்காதது, சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, அமைச்சர்கள், பா.ஜ., – எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்காக, அரசு இல்லத்தில் நேற்று விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பங்கேற்கவில்லை.
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை சம்பவம் தொடர்பாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின், பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளார். இப்போது முதல்வர் ஏற்பாடு செய்த விருந்திலும் பங்கேற்கவில்லை.இவர் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா, அமைச்சர் மாதுசாமியும் விருந்துக்கு வரவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி, அமைச்சர்கள், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்பாடு செய்த விருந்தில், முன்னாள் அமைச்சர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.