மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தியபோது, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும், அதனால் டி.எஸ்.பி. சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கல்யாணி தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், சிவில் பிரச்னையில் டி.எஸ்.பி. சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு, மனுதாரர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து மனஉளைச்சலை ஏற்படுத்தியது மனித உரிமை மீறல் என நிரூபணம் ஆவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட கல்யாணிக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை டி.எஸ்.பி. சுவாமிநாதனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.